Friday, April 8, 2016

என் டைரி பெட்டகத்திலிருந்து... 2. என் பதினாறு வயது காதல்!

2. என் பதினாறு வயது காதல்!

வானின் விண்மீன்கள் எண்ணி விடும் காலம் போதும் 
உன் மடியில் சாய்ந்துத் தூங்க!
விண்ணின் தூரம் அளந்துவிடும் நேரம் போதும் 
உன் தோழில் சாய்ந்து மகிழ!
மழைத் துளி தொட்டால் போதும் 
உன் அணைப்பை உணர!
என் விழி ஓரம் நீர் வழிவதே போதும் 
என் அன்பு என்னென்று நீ காண!
நிலவின் அழகு, நிலத்தின் அளவு 
கூட போதுமேன்றாகாது.. 
என் உணர்ச்சிகளைக் கொட்ட!
என் மனதில் எழும் தமிழின் பெருக்கம் 
வாய் மொழியில் எழாதோ உன் கண்கள் முன்?

வாய் பூட்ட பெற்ற 
பதினாறு வயது காதல் கிறுக்கி!
சாரா 

No comments:

Post a Comment