3. புலம்பல் குவியல் படிக்க வேண்டாம்!
அ. கண்ணில் குறுதியின் பெருக்கம்
மனதில் சோகத்தின் தாக்கம்
வார்த்தைகள் உதடு மட்டும் ஓசையின்றி
என்ன இந்நிலையோ இப்பெண்ணுக்கு
துணைவன் பிரிவினால்!
என்ன பரீட்சையோ வாழ்வில்
தனிமை நிலையினால்!
எவருக்கும் இவ்வித நிலை வேண்டா..
என்றும் ஓர் அடிமையாய்!
ஆ. சுனாமியைப் போல் ஒரு
ஒரு அலை என்னைத் தாக்கினாலும்
மனதின் தாக்கம் குறையாது
வானளவு சோகம் பெருகினாலும்
சோர்வின் தாக்கம் பெருகாது
மண்ணளவு எனும் நிம்மதி கிட்டும் என்றே
என் பொறுமையின் அளவு குறையாது
என்று வரை இந்நிலையோ நீ என்னை
ஆட்கொள்ள மாட்டாயோ வீடே
விடு பெறவே வீடு பெற நினைக்கிறேன்!
இ. கண்ணில் நீரில்லை
ஆனால் சோகத்தின் தாக்கம்
இதயம் துடிக்கிறது கதறலை நாடி
அங்ஙனம் தான் அறிந்தேன்
மனதின் அழுகை நீரில் இல்லை
ஏனோ !
வற்றியது நீர்..
மருகியது மனம்..
பெருகியது துயர்
கருகியது திடம்
கொடுமையாய் சோகக் கவிதை எழுதும்
தோழி
சாரா
No comments:
Post a Comment